Header Ads

சுகாதார ஊழியர்கள் இன்றும் நாளையும் வேலைநிறுத்தம்


 நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு எதிர்ப்புத் தெரிவித்து பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் (PHIU) உள்ளிட்ட துணை மருத்துவத் தொழில்களுக்கான கூட்டு கவுன்சில் இரண்டு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளது.

இந்த தொழிற்சங்க நடவடிக்கை இன்று (29) மற்றும் நாளை (30) முன்னெடுக்கப்படும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.

பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் தாதியர்கள் உட்பட 8 இடைநிலை சுகாதார தொழிசங்கத்தினர் இன்று மற்றும் நாளை பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக இடைநிலை சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார். எரிபொருள் நெருக்கடி காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.