Header Ads

மண்டபத்தின் நடைபாதையில் விடைத்தாள் திருத்தப்படும் அவலம்

 


க.பொ.த சாதாரண தரப் பரீட்சை விடைப்பத்திர மதிப்பீட்டுக்கு இடம்கிடைக்காமையினால் பிரதான மண்டபத்தின் நடைபாதையில் விடைப் பத்திரங்கள் திருத்தும் பணி இடம்பெறுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சாதாரண தர பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

மதிப்பீட்டு நிலையமாக பயன்படுத்தப்பட்டு வந்த திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரியில் இன்றைய தினம் (27) பாடசாலை மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பரீட்சை விடைத்தாள்களை திருத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட வகுப்பறைகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், விடைத்தாள் திருத்தும் பணிகளுக்கு வேறு இடம் கிடைக்காமையினால் பாடசாலையின் பிரதான மண்டபத்தின் நடைபாதைகளில் வைத்து விடைத்தாள்கள் திருத்தும் பணியில் குழுவினர் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

No comments

Powered by Blogger.