நகர்ப்புறப் பாடசாலைகள் ஜூலை 10 வரை மூடப்படும்
இன்று (27) நள்ளிரவு முதல் ஜூலை 10 ஆம் திகதி வரை அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருள் விநியோகிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அரசாங்கப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
நகர்ப்புறங்களில் உள்ள பாடசாலைகள் ஜூலை 10 ஆம் திகதி வரை மூடப்படும் என்றும் மற்ற பகுதிகளில் உள்ள பாடசாலைகள் அந்தந்த அதிபர்களின் விருப்பத்தின்படி செயல்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.
எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டதன் காரணமாக மாகாணங்களுக்கு இடையிலான பேருந்துகளும் இடைநிறுத்தப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.
ஜூலை 10 ஆம் தேதி முதல் தடையின்றி எரிபொருள் மற்றும் எல்பி எரிவாயு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருளைப் பயன்படுத்தி, ஏற்றுமதித் துறை மற்றும் சுற்றுலாத் துறையின் செயல்பாடுகளை தனியார் துறை நிர்வகிக்க வேண்டும் என்று அரசாங்கம் எதிர்பார்க்கிறது என்று அவர் மேலும் கூறினார்.
No comments